Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 10, Verse 6

மஹர்ஷய: ஸப்11 பூ1ர்வே ச1த்1வாரோ மனவஸ்த1தா2 |

மத்1பா4வா மானஸா ஜாதா1 யேஷாம் லோக1 இமா: ப்1ரஜா: ||6||

மஹா-ரிஷயஹ—--சிறந்த முனிவர்களும்; ஸப்த—--ஏழு; பூர்வே—--முன் இருந்த; சத்வாரஹ—--நான்கு; மனவஹ—--மனுக்கள்; ததா--—மேலும்; மத்-பாவாஹா—--என்னிடமிருந்து பிறந்தவர்கள்; மானஸாஹா—--மனதிலிருந்து; ஜாதாஹா—--பிறந்தவர்கள்; யேஷாம்—--அவர்களிடமிருந்து; லோகே—--உலகில்; இமாஹா—--இவை அனைத்தும்; பிரஜாஹா----மக்கள்

Translation

BG 10.6: ஏழு பெரிய முனிவர்களும், அவர்களுக்கு முன் இருந்த நான்கு மகான்களும், பதினான்கு மனுக்களும் என் மனதில் இருந்து பிறந்தவர்கள், உலகில் உள்ள அனைத்து மக்களும் அவர்களிடமிருந்து பிறந்தவர்கள்.

Commentary

இங்கு, ஸ்ரீ கிருஷ்ணர், இருக்கும் அனைத்திற்கும் அவரே ஆதாரம் என்று தொடர்ந்து விளக்குகிறார். முன்பு, அவர் இருபது உணர்ச்சிகளைக் குறிப்பிட்டார்; இப்பொழுது, ​​அவர் இருபத்தைந்து உயர்ந்த ஆளுமைகளைக் குறிப்பிடுகிறார். இவர்கள் நான்கு பெரிய குமாரர்கள், ஏழு பெரிய முனிவர்கள் மற்றும் பதினான்கு மனுக்கள். அவரிடமிருந்து பிறக்கும் பிரபஞ்சத்தின் பரம்பரைச் சுருக்கத்தையும் அவர் வழங்குகிறார்.

ப்ரஹ்மா, விஷ்ணுவின் பொருள் சிருஷ்டியை நிர்வகிக்கும் கடவுளின் வடிவத்தின் (ஹிரண்யகர்ப ஆற்றல்). ஆற்றலில் இருந்து பிறந்தார் ஸனக், ஸனந்தன், ஸனத் மற்றும் ஸனாதன் ஆகிய நான்கு சிறந்த துறவிகள் பிறந்தனர். அவர்கள் நான்கு குமாரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். நமது ப்ரபஞ்சத்தில், நான்கு குமாரர்களும் ப்ரஹ்மாவின் மூத்த பிள்ளைகள்.அவர்களுடையது தந்தையின் மனதில் இருந்து ஒரு பாலுறவில்லா பிறப்பு என்பதால், அவர்களுக்கு தாய் இல்லை. நித்தியமாக விடுதலை பெற்ற ஆன்மாக்களாகவும், யோக அறிவியலில் வல்லுனர்களாகவும் இருந்ததால், பிறருக்கு ஆன்மீக பயிற்சி மூலம் விடுதலை அடைய உதவுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றனர். நான்கு குமாரர்களுக்குப் பிறகு, ஏழு முனிவர்கள் வந்தனர். அவர்கள்; மாரீச்1, அங்கீ3ரா, அத்3ரி, பு1லஸ்தி1யா, பு1லஹா, க்1ரது1 மற்றும் வசிஷ்டா2. அவர்கள் இனப்பெருக்கம் செய்யும் பணியில் அதிகாரம் பெற்றனர். பிறகு பதினான்கு மனுக்கள் – ஸ்வயம்பு4வ, ஸ்வரோச்சிஷ, உத்11ம், த1மஸ், ரைவத்1, ச1க்ஷுஷா, வைவஸ்வத்1, ஸவர்ணி, த3க்ஷஸவர்ணி, ப்3ரஹ்மஸவர்ணி, த4ர்மஸவர்ணி, ருத்3ர பு1த்1ரா, ரோச்1ய, மற்றும் பௌ4த்1யகா அவர்கள் தேவலோக இருப்பிடங்களிலிருந்து மனிதகுலத்தை நிர்வகிப்பதற்கும், வேத தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் அதிகாரம் பெற்றனர். நாம் தற்பொழுது வைவஸ்வத மனு என்று அழைக்கப்படும் ஏழாவது மனுவின் சகாப்தத்தில் இருக்கிறோம். இந்த சகாப்தம் வைவஸ்வத் மன்வந்தர் என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய கல்பத்தில் (ப்ரஹ்மாவின் நாளில்), மேலும் ஏழு மனுக்கள் இருப்பார்கள்.

தேவலோக இருப்பிடங்களில், பிரபஞ்சத்தின் பராமரிப்பைக் கண்காணிக்கும் பல ஆளுமைகள் உள்ளனர். இந்த ஆளுமைகள் அனைவரும் மஹா விஷ்ணுவிடமிருந்து பிறந்த ப்ரஹ்மாவின் மகன்கள் மற்றும் பேரன்கள், மஹா விஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணரின் வேறுபாடற்ற விரிவாக்கமாகும்.. எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா முன்னோர்களுக்கும் (ப்1ரபி1தா1மஹ) அசல் மூதாதையர் என்று நாம் கூறலாம்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
10. விபூதி யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!